போதை திருடனை பிடித்துக் கொடுத்த மக்கள்! விடுவித்த போலிஸ்?

ஜி.கே.சேகரன்!

 ஆம்பூரில் பந்தல் அலங்காரம் அமைக்கும் கடையில் புகுந்து  கொள்ளையடித்து செல்லும்  கொள்ளையனிடமிருந்து   ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த கொள்ளையனை விடுவித்த போலீசார்

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பாஜக நகர இளைஞரணி தலைவர் சரத் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பந்தல் அலங்காரம் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.

  மேலும் பந்தல் அலங்காரம் அமைக்கும் பொருட்களை ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது கடையில் வைத்து திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்று அலங்கார பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

 இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கடையை பூட்டாமல் விட்டிற்கு சென்றுள்ளார்.

 அந்த வேளையில் அவ்வழியாக வந்த குடிபோதை ஆசானி கடையில் இருந்த   சாஸ்தா விளக்கு மற்றும் விலை உயர்ந்த பந்தல் அலங்காரப் பொருட்களை மூட்டை கட்டி  எடுத்து சென்றுள்ளான்.

  குடிபோதையில் இருந்த கொள்ளையன் சிறிது தூரம் சென்று திருடிச் சென்ற பொருட்களோடு  போதையில் சாலையோரம் விழுந்துள்ளான்.

  இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ள வணிகர்கள் அவரை ஒரு ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

   ஆனால் அவர் போதையில் உள்ளதாக கூறி போலிசார் விடுவித்தனராம்.

 மேலும் கடந்த மாதம் இதே கடையில் இருந்து இருசக்கர வாகனம் ஒன்று கொள்ளை போனதாகவும் பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து கொடுத்தும் குடிபோதையில் இருப்பதாக கூறி விடுவித்த போலீசாரால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.