செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம் பகுதி சேர்ந்தவர் முத்து(22). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
அவரது உறவினர்கள் விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்ப கொண்டக்குப்பம் பகுதியிலிருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது.
இதில் தொடை பகுதியில் காயம் ஏற்பட்ட முத்து என்ற இளைஞரை வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த இராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.