சுரங்கத் துறையின் தில்லாலங்கடி ரசீது!

ஆ.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள சோலூரில் மண் கடத்தல் ஏக போகமாக நடந்துவருகிறது.
இது குறித்த புகார் நம்ம ஆபிசருங்க காதுகளுக்கு போச்சாம். உடனே பாய்ந்த அணைக்கட்டு காவல் நிலையத்தார்,சம்மந்தப்பட்டவர்களை மண்ணோடு பிடித்தனர்.
பிடிபட்ட மண் திருடன்கள் ஒரு ரசீதை காட்டி அய்யா...அய்யா இத பாருங்க நாங்க திருப்பத்தூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் வாங்கிய பர்மிட் உள்ளது என்று காட்டிவிட்டு டிமிக்கி கொடுத்துவிட்டு மண்ணோடு மறைந்தனர்.அந்த பர்மிட்டில் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மண் திருட்டை பிடித்துக் கொடுத்த அமைப்பினருக்கு கடுங்கோபம், உடனடியாக திருப்பத்தூர் சுரங்கத்துறை அலுவலர்களை சந்தித்து பர்மிட்டை காட்டியுள்ளனர். அதைப் பார்த்த அத்துறையினர் இது நாங்கள் கொடுத்த பர்மிட் இல்லீங்கோ என்று நழுவிக்கொண்டனர்.
விடாத புகார்தாரர்கள் அய்யா ஆபிசரு...உங்க ஆபிஸ் பர்மிட்டை டுபாக்கூரா பயன்படுத்தியிருந்தா அதற்கு நீங்க புகார் கொடுக்கமாட்டீங்களா என்று முகத்தில் அடித்தார் போல் கேளிவி எழுப்பினர். அதற்கு முகத்தை திருப்பிக் கொண்டனராம் அந்த ஆபிசர்ஸ்.
ஆகவே இந்த டுபாக்கூர் ரசீது மேட்டரை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்செல்ல முடிவெடுத்துள்ளனராம்.
எப்படியும் நியாயம் கிடைச்சுடும் போல.