மொபைல் சாராய வியாபாரியை மடக்கிப் பிடித்த ஆம்பூர் போலிஸ்!

 ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கள்ள சாராயம் கடத்தி வந்த இளைஞர் கைது, அவரிடம் இருந்த வெளிமாநில 200 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர்  கள்ளசாராயம்  பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து  சோதனை மேற்கொணடனர்.

  அப்போது அவர் வைத்திருந்த பைகளில்  (டிராவல்ஸ் பேக் ) கர்நாடக மாநில 200 பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரிய வந்தது.

   பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் ஆம்பூர் அடுத்த பழைய சோலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பதும் தொடர்ந்து ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து குறைவான விலைக்கு மது பாக்கெட்டுகள் வாங்கி இருசக்கரம் வாகனத்தில் கடத்தி வந்து சோலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அனுமதியின்றி வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த ராஜேஷை  சிறையில் அடைத்தனர்.