துப்பாக்கி முனையில் கொள்ளை! ப்ளஸ் டூ மாணவன் பிடிபட்டான்!

துப்பாக்கி முனையில் கொள்ளை! ப்ளஸ் டூ மாணவன் பிடிபட்டான்!

  சசிக்குமார்,

  இராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் உட்கோட்டம் , அரக்கோண நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்வாய் பகுதியில் கடந்த 16.10.2021 ஆம் தேதி இரவு ஆனந்த கிருபாகரள் மற்றும் ரேணு ஆகிய தம்பதியினரை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த 40 inch TV, Camera, Laptop, Computer,, ஆகிய பொருட்களை அந்நிய நபர்கள் திருடிவிட்டதாசு கொடுத்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது,

   மேலும் கடந்த 17.12.2021 ஆம் தேதி இரவு செய்யூர் - கண்ணிகாபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது கொள்ளையர்கள் அத்துமீறி உள்ளே நுழைத்து ஹஐசு ழுருசூ மூலம் தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்தி நகைகளை கொள்ளைபடித்து சென்றதாக கோவிந்தசாமி வ / 70 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  இவ்விரு வழக்குகள் தொடர்பாக காவல் துறை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு மற்றும் கூடுதல் காவல் துறை இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு . தாமரைகண்ணன் இ.கா.ப. , ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார் , இ.கா.ப. , வேலூர் சரக துணைத்தலைவர் திரு . ஏ.ஜி.பாபு , இ.கா.ப .. அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்தியன் , இ.கா.ப. , அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 தனிப்படையினரை ஆந்திரா, திருவள்ளூர் , காஞ்சிபுரம் , வேலூர் , திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பபட்டது. இத்தணிக்கையில் கிடைத்த சந்தேக நபர்களின் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

  அதில் திருவலங்காடு, வியாசபுரத்தை சேர்ந்த சின்னராசு வ / 23 , த / பெ உதயசூரியன் என்பவரும் அவரது நண்பரான 17 வயது நிரம்பிய இளங்சிறார் பள்ளி மாணவர் ஒருவரும் ஈடுபடுட்டதாக கண்டறியப்பட்டு இன்று 28.12.2021 தனிப்படை மூலமாக உச்சநீதிமன்ற கைது செய்து விசாரணை செய்ததில் குற்றத்தினை  பின்பற்றி ஒப்புக்கொண்டனா.

  மேலும் மேற்கூறிய இரண்டு சம்பவங்களிலும் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களான Air Gun, Pellet Box – 1, வாள் - 01 , கத்தி -01 , நகைகள் , SMART TV, Video Camera-01, Focusing-lens-01, Laptop-01, SMART PHONES 02 ஆகியவை எதிரிகளிடமிருந்து அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் இந்நபர்கள் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா , இச்சம்பவங்களில் வேறு நபர்கள் எவரேனும் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடைப்பெற்ற வருகிறது.

  இதற்கான தனிப்படையில் பணியாற்றிய  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இணைய வழி குற்றம் திரு.முத்துக்கருப்பன் , விழுப்புரம் மாவட்ட இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் மற்றும் 4 துணை காவல் கண்காணிப்பாளர்களான புகழேந்தி கணேஷ் , அரக்கோணம் உட்கோட்டம்,.குணசேகரன் , பொண்ணேரி உட்கோட்டம்,  ரவிசந்திரன் , மதுவிலக்கு அமலாக்க பிரிவு வேலூர் , மனோகரன் , குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு வேலூர் ஆகியோர் தலைமையில் 11 காவல் ஆய்வாளர்கள் . 16 உதவி ஆய்வாளர்கள் , காவல் தொழில்நுட்ப பிரிவு . தடய அறிவியல் , மோப்ப நாய் , கை ரேகை ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் 60 காவலர்கள் ஆகியோர்களை உயர் அதிகாரிகள் பாரட்டினர்.