சாலை போட எதிர்ப்பு காட்டிய தனி நபர்!கெத்து காட்டிய மக்கள்!

சாலை போட எதிர்ப்பு காட்டிய தனி நபர்!கெத்து காட்டிய மக்கள்!

  கு.அசோக்,

 நாட்றம்பள்ளி அருகே 27 வருடமாக  பயன்படுத்திய தார் சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

   திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கள்ளுக்கடை பகுதியில் இருந்து  சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் தாயப்பன் நகர் வரை போடப்படும் தார் சாலைக்கு தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

 எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

  இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில் நாங்கள் சுமார் 27 வருடங்களாக இந்த சாலையை பயன்படுத்தி வருகிறோம். எங்கள் இருந்து வரும் பள்ளி மாணவ மாணவிகள் கள்ளுகடை அருகாமையில் இருக்கும் நடுநிலைப் பள்ளிக்கு வந்து தான் கல்வி பயில வேண்டும்.

 அதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் யாராவது இறந்து விட்டால் இந்த சாலையை பயன்படுத்திதான் சடலத்தை எடுத்துச் சென்று நடுநிலைப் பள்ளிக்கு பின்புறம் உள்ள சுடுகாட்டில் புதைக்க வேண்டும்.

மருத்துவமனைக்கோ அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கோ நாங்கள் எங்கள் பகுதியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் இதே சாலையைதான் பயன்படுத்த வேண்டும்.

இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவருடைய மகன்கள் கோவிந்தராஜ் ராஜா சாமன்னன் முருகன் ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே ஊராட்சி மூலமாக 3 முறை போடப்பட்ட தார் சாலையை தற்பொழுது போடக் கூடாது என்று தடுத்து நிறுத்தி சாலை போடுவதற்காக போடப்பட்ட ஜெல்லியை அகற்றி பள்ளம் தோண்டி வைத்து பிரச்சினை செய்கிறார்கள்.

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் எங்கள் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் செயலர் ரங்கநாதன் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது