படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்!அமைச்சர் காந்தி!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்!அமைச்சர் காந்தி!!

கு.அசோக்,

     ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் புதியதாக மாவட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆ.¢ காந்திக்கு மாணவர்களின் இசை முழக்கத்துடன் கைகளை தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியினை அமைச்சர் ஆர் காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

  பின்னர் மாணவர்களின் மத்தியில் பேசிய பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுடைய முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் ஆகவே இந்த மாணவப் பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம் என தெரிவித்தார்.

   மேலும் இந்த அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு இங்கு பயிலும் மாணவ மாணவிகள் தொலைநோக்கு பார்வையுடன் படிக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவி சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  மாவட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி ஏற்கனவே தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.