ராணுவ வீரர் மாயம்! ஆட்சியர் முன்னிலையில் மயங்கி விழுந்த மனைவி!

ராணுவ வீரர் மாயம்! ஆட்சியர் முன்னிலையில் மயங்கி விழுந்த மனைவி!

 ஜி.கே.சேகரன்,

 ஆம்பூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் பங்கேற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் ராணுவத்திற்கு சென்ற கணவரை காணவில்லை என மனு அளிக்க வந்த ராணுவ வீரரின் மனைவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் காதுகேளாதோர் பள்ளியில் பள்ளி கல்விதுறை சார்பில்  மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தார்.  அப்போது அங்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஆம்பூர் புதுமனை பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரரின் மனைவி நித்யாஷீலா என்பவர் திடீரென மயங்கி  விழுந்தார்.

 பின்னர் அவரை அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம்  தெளிந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியனிடம் மனு அளித்தார்.

 அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

 தனது கணவர் வசந்தகுமார் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் வட மாநிலம் கூவாத்தி  பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி மீண்டும் கடந்த 15 :09 :2023 அன்று பணிக்கு திரும்பிய போது தொடர்ந்து ரயில் மூலம் சென்று கொண்டிருந்தபோது மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டிருந்த வசந்தகுமார் 18:09:23 தேதிக்கு பிறகு அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

 எனவே 24:09:23  பாதுகாப்பு படை பிரிவு அலுவலக அதிகாரியுடன் தொடர்பு கொண்ட போது அவர் பணிக்கு மீண்டும் திரும்ப வில்லை என கூறியதால் அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் பல வகையில் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும்  எந்தவித பலனும் இல்லாததால்  மத்திய பாதுகாப்பு படை பிரிவு பணிக்கு சென்ற தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 ஆம்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மத்திய பாதுகாப்பு படை வீரரின்  மனைவி மயங்கி விழுந்ததால்  அப்பகுதியின் சில மணி நேரம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.