மிக்சிங் டீசல் விற்ற 5 பேர் கைது!மாமுல் லேட் ஆனதால் நடவடிக்கையாம்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஸ்டெர்லைட் ஆலை அருகே கலப்பட டீசல் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
காங்கேயத்தில் இருந்து தூத்துக்குடி வந்த டேங்கர் லாரியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது மேற்படி இடத்தில் டேங்கர் லாரியில் இருந்து டீசலை பேரல்களில் நிரப்பி மற்றொரு வாகனத்தில் ஏற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விசாரித்த போது டேங்கர்களிலிருந்து திருட்டுதனமாக வாங்கப்படும் டீசலில் மண்னெண்ணெயை கலந்து விற்பனை செய்யும் கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் ஆய்வு செய்த அலுவலர்கள் அது கலப்பட டீசல் என்பதை உறுதிப்படுத்தியதன் பேரில் 5 பேரை கைது செய்தனர்.
படகுகள் மற்றும் லாரிகளுக்கு இந்த கலப்பட டீசல் விற்கப்படுவதாக பிடிப்பட்டவர்கள் வாக்கு மூலம் அளித்த நிலையில் கலப்பட டீசலை பறிமுதல் செய்து தப்பியோடிய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
இது வழக்கமாக நடத்தப்படும் தொழில் தான் தற்போது மாமுல் கொஞ்சம் லேட் ஆனதால் அலுவலர்கள் தங்கள் கடமையை செய்தார்களாம்.
இப்படித்தான் இந்த விவரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்,