சாதிபிரச்சனை என திசை திருப்பி காலபைரவர் ஆலயத்தை அபகரிக்க முயற்சி!

சாதிபிரச்சனை என திசை திருப்பி காலபைரவர் ஆலயத்தை அபகரிக்க முயற்சி!

 கு.அசோக்,

 காலபைரவர் ஆலயத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு சாதிபிரச்சனை இருப்பதாக ஒரு தனி நபர் குழு முயற்சி செய்து வருகிறது. அந்த தீய சக்திகளின் கெட்ட என்ணத்தை அரசு தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

 வேலூ£ ¢மாவட்டம், பாலமதி ஊராட்சிக்குட்பட்ட செங்காநத்தம் மலை பகுதியில் மரத்தடியில் உள்ள ஸ்ரீ காலபைரவர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  பக்தவச்சலம் என்பவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக இந்த காலபைரவரை தங்களின் சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர்¢ மக்கள் கூட்டம் அதிக அளவில் இந்த ஆலயத்திற்கு வருவதால் அதே கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் உள்ளிட்ட 6 தனி நபர்கள் இந்த ஆலயத்தை அபகரிக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். அதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை அவர்கள் நாடிய நிலையில்நீதிமன்றம் விசாரணை நடத்தி இந்த ஆலயம் பக்தவச்சலம் குடும்பத்துக்கு சொந்தம் என 2012 ஆம் ஆண்டில்  தீர்ப்பளித்துள்ளது.

   இந்த நிலையில் மீண்டும் அதே தனி நபர்கள் இந்த ஆலயத்தை அபகரிக்க வேண்டுமென அரசியல் கட்சியினரின் பலத்தோடு முயற்சி மேற்கொண்டு ஜாதி பிரச்சணையை உருவாக்கி அதனை அபகரிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

  அனைத்து பிரிவினரும் சமம் என்று கருதும் நிலையில், இந்த ஆலயத்தில் கடவுள் வழிபாடு  சிறப்பாக நடந்து வரும் நிலையில், மேற்படி நபர்கள் வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ஆகவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.