அதிமுக பெயரை பயன்படுத்துபவர்களுக்கு அனுமதி தந்தால் சட்டம் ஒழுங்கு கெடும்! மா.செ. தலைமையில் எஸ்.பி.யிடம் புகார்!

அதிமுக பெயரை பயன்படுத்துபவர்களுக்கு அனுமதி தந்தால் சட்டம் ஒழுங்கு கெடும்! மா.செ. தலைமையில் எஸ்.பி.யிடம் புகார்!

ஜி.கே.சேகரன்,

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடியோ சின்னத்தையோ பயன்படுத்தி வரும் 1 ஆம் தேதி ஆர்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரியுள்ளதை அனுமதிக்க கூடாது என அதிமுகவினர் மனு அளித்தனர்.

 வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களிடம்  அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.அப்பு தலைமையில்  மாவட்ட நிர்வாகி காகிதப்பட்டரை மூர்த்தி, வழக்கறிஞர்கள் அண்ணாமலை, பாலசந்தர், உள்ளிட்டோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

  அதில் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டவர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் சில நபர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக வரும் 1 ஆம் தேதி மவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம் நடத்த அதிமுகவின் பெயரில் மனுவை கொடுத்துள்ளனர்.

  கட்சிக்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் எங்களுடைய அதிமுக கொடியையும் சின்னங்களையும் பயன்படுத்த உள்ளதை தடுத்து அந்த தனி நபர் குழுவின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க தவறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினர் வரும் 1ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் நடைபெற்ற கொலைகொள்ளைகளை உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஆர்பாட்டம் அதிமுகவின் பெயரில் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த புகார் மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.