நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள்!

வித்யா,
ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.
அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், கடலோர ஆந்திராவில் வரும் காலங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக கனமழை மற்றும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், சிரஞ்சீவி, மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட டோலிவுட் நடிகர்களில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பங்களித்துள்ளனர்.
மற்றவர்களையும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
"ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் அடைமழையால் ஏற்பட்ட பரவலான பேரழிவு மற்றும் அழிவுகளால் வேதனை அடைந்தேன். நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சங்களை தாழ்மையான பங்களிப்பாக வழங்குகிறேன்" என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் குறியிட்ட சிரன்ஜீவி கூறினார்.
நடிகர் மகேஷ் பாபு பேசுகையில், "ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் நிவாரண நிதியாக 25 லட்சத்தை வழங்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உதவ அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜூனியர் என்டிஆர், ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாகவும் கூறினார். "ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையைக் கண்டு, அவர்கள் மீண்டு வருவதற்கான ஒரு சிறிய பங்களிப்பாக 25 லட்சங்களை வழங்குகிறேன்" என்று அவர் கூறினார்.