குவார்டர் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம்! கேள்வி கேட்டால் ரூ.2 ரிட்டர்ன்!

க.பாலகுரு,
செந்தில் பாலாஜிக்கு பதிலாக புதிதாக மதுவிலக்கு துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் மதுபான விலைக்கு மேலே ஒரு பைசா அதிகமாக வாங்கக் கூடாது என உத்தரவிட்ட போதிலும், அவரது உத்தரவை டாஸ்மாக் ஊழியர்கள் பலர் ஊதாசீனப்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கேள்வி கேட்கும் மதுப்பிரியர்கள் தாக்கப்படுகிறார்கள்.
குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது இதில் புது டெக்னிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மதுப்பிரியர் சரக்கு வாங்கியுள்ளார். அப்போது வழக்கம் போல 10 ரூபாயை டாஸ்மாக் ஊழியர்¢ அதிகமாக வசூலித்தார். அப்போது, "எதற்காக 10 ரூபாய் அதிகம் வாங்குகிறீர்கள்" என மதுப்பிரியர் கேள்வி கேட்டதற்கு, 2 ரூபாயை டாஸ்மார் ஊழியர் கஸ்டமரிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.
அப்பக்கூட குவார்ட்டர் பாட்டிலுக்கு 8 ரூபாய் அதிகமாக வசூலித்துவிட்டார்கள்.