கக்கூஸ் கழுவவா பள்ளிக்கூடம் அனுப்பினோம்?!
ஜெ.ஜானி,
கக்கூஸ் கழுவவா பள்ளிக்கூடம் அனுப்பினோம் என்று பெற்றோர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், முள்ளம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளியில் ஆசிரியர் சுதா மற்று தலைமையாசிரியர் மைதிலி ஆகியோர், பள்ளிக்கு வரும் சிறார்களை கக்கூஸ் கழுவ வைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
இதை ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்ற அப்பகுதி இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் இது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, நான்காம் வகுப்பு படிக்கும் அவளது அண்ணன் இருவரும் கக்கூஸ் கழுவிக்கொண்டிருந்ததை அந்த இளைஞர் படமாக்கினார். அந்த சிறார்களின் கால்களில் செறுப்பு கூட இல்லை.
அப்போது அந்த சிறார்கள் தெரிவிக்கையில், யார் பள்ளிக்கூடத்துக்கு முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் கக்கூஸ் கழுவவேண்டும் என்று டீச்சர் சொன்னதாக சொன்னார்கள்.
மேலும் சுதா டீச்சரும், மைதிலி தலைமையாசிரியரும் தான் இப்படி வேலை செய்யவைக்கிறார்கள் என்று வேறு ஒரு மாணவியும் தெரிவித்திருக்கிறார்.
இதான் பாடம் சொல்லிக் கொடுக்கிற லட்சணமா என்று கேள்வியெழுப்பும் பெற்றோர்கள், அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் அவர்களுக்கு அதன் அருமை தெரியும். அது வேணும், இது வேணும் என்று அரசாங்கத்தை மிரட்டி பணியவைத்து உண்டு கொழுக்கும் இது போன்ற ஆசிரியர்களை எதால்..... அடித்தால் தகும் என்று காட்டமாக சொல்கிறார்கள்.