கலெக்டர், டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. சைக்கில் பேரணி!
த.நெல்சன்,
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் இளைஞர்கள் திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மிதிவண்டி மற்றும் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப., அவர்கள், திருவள்ளூர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் டி. ஆறுமுகம் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுடன் மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்றனர்.