அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி!

 

த.நெல்சன்,

   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.04.2023) அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஏற்று கொண்டனர்.

  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்  திரு.க.இராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் திரு.தனஞ்செயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி வ.மு.சீதா,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ப. சுமதி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.