வக்கீல் குமாஸ்தாவுக்கு அரிவாள் வெட்டு! போலிஸ் ஜீப்பில் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாரதியின் மகன் விஜய். இவர் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார்.

 இந்நிலையில் இன்று 13.04.2023 அன்று காலை மேற்படி விஜய் வீட்டிலிருந்து வெளியில் வந்த போது, பாரத், பன்னீர்,  பண்ணு (எ) சரத்குமார், சுதர்சன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டனர்.

  தேர் திருவிழா யார் நடத்துவது மற்றும்  ஊரில் யார் பெரியவர் என்கிற போட்டியில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

 சம்பவம் பற்றி அறிந்த பள்ளிகொண்டா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்கள் வெட்டுபட்ட விஜயை காவல் துறை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்க செய்தார்.

 இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறுகையில் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தபடியால் எந்த ஆபத்தும் இல்லை, விஜய் நலமாக உள்ளார் என்று சொன்னார்.