நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம்! தொண்டர்களை அலார்ட் செய்த அமைச்சர் துரைமுருகன்!

ஜி.கே.சேகரன்,
மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை, நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சேர்த்தே நடத்துவாரா என தெரியவில்லை. எது வந்தாலும் தேர்தலை சந்திக்க திமுகவினர் தாயாராக இருக்க வேண்டும் தொகுதி கூட்டங்களை இப்போதே துவங்கிவிட வேண்டும் வேலூரில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வருகை தந்து திமுக பவள விழா கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாக்களில் கலந்து கொள்வது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளரும்,¢ அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்த சட்டமன்ற உறுப்பினர் அமுலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை, அவர் ஆட்சியை நடத்தப் போகிறாரா அல்லது அமெரிக்காவைப் போல் ஜனாதிபதி அரசாங்கம் கொண்டுவர போகிறாரா? அல்லது தேர்தலை முன்கூட்டியே கொண்டு வருகிறாரா? அல்லது தள்ளி வைக்கிறாரா என்னவென்று தெரியவில்லை திடீரென கூட்டத்தைக் கூட்டி உள்ளா£ர்
¢ ஆனால் ஒன்று மற்றும் நன்றாக தெரிகிறது தேர்தல் விரைவில் வர இருக்கிறது சட்டமன்றமும் நாடாளுமன்றமும் சேர்ந்து வருமா என்பது மட்டும்தான் இப்போது கேள்வி? ஆனால் நாம் சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்தே வருவதாக நினைத்து பணியாற்ற வேண்டும். இந்த விழாக்கள் முடிவதற்கு முன்னால நிலைமைகளை அறிந்த அதை செய்ய வேண்டும் எனவே தேர்தல் வருகிறது என வழியில் போகும்போது உஷாரா கையில் கம்பெடுத்துபோவது போல் செல்ல வேண்டும் என பேசினார்.
பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பவள விழா கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்டவைகள் முப்பெரும் விழாவாக வேலூர் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாங்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
மாநாடுகளை நடத்துவதிலும் ஊர்வலம் நடத்துவதிலும் என்றைக்கும் வேலூர் மாவட்டம் சளைத்து போனதும் இல்லை சலித்து போனதும் இல்லை எனவே மாற்றாரும் மிரளத்தக்க வகையில் இந்த விழாவை நடத்திக் காட்டவும் உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்காக கூட்டத்தைக் கூட்டி உள்ளதாக கூறுகிறார்கள் அவ்வாறு கூட்டினால் அவ்வாறு செய்தால் அதில் சட்ட சிக்கல்கள் உண்டு.
எப்போது என்ன செய்யப் போகிறார்கள் என ஒன்றும் தெரியவில்லை ஒரு புரியாத புதிராக உள்ளது அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்க காரணம் அவர்கள் எப்போதும் பாஜகவோடு கூட்டணி செல்கிறார்கள். மேகதாதுவில் தண்ணீர் திறந்தது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது நாங்களும் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளோம். வழக்கு ஆறாம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது. பாஜக சிறிய அளவில் பெரிய அளவில் நடுளவில் எல்லா அளவிலும் எங்களை எதிர்த்து பிரச்சாரங்களை செய்கின்றனர்.
நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை தமிழகத்தில் ஆங்காங்கே மேம்பாலங்களில் இடிக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலத்தில் தான் சாலைகள் சரியில்லாததற்கும் அவர்கள் தான் காரணம் எனக் கூறினார்.