தமிழகத்தில் போதை பொருள் கடத்திய 470 பேர் கைது! இரண்டே மாதங்களில் பகீர்!

உ.சசிகுமார்,
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் தற்போது தேடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் போதை பொருள் கட்டத்தல்காரர்களை தீவிரமாக மடக்கிபிடித்துக் கொண்டுதான் உள்ளார்கள். அந்த வகையில், தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2 மாதங்களில் 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி அலுவலக வட்டாரம் தகவ்ல் தெரிவித்திருக்கிறது.
போதை பொருளினால் ஏற்படும் தீங்கு குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போதை பொருள்களை தொடர்ந்து கடத்தி வருபவர்கள், பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்குகளை முடக்கவும் நட வடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக 470 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,914 கிலோ கஞ்சா, 3,321 போதைமாத்திரைகள், 2 கிலோ மெத்தம் பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதை பொருள் விற்பனை, கடத்தலுக்குப் பயன்படுத்திய 21இருசக்கர வாகனங்கள், 6 இலகுரகவாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகிய வையும் கைப்பற்றப்பட்டுள்ளன. போதை பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 25 பேருக்கு நீதிமன்றம் மூலம் காவல்துறை தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது என்று கூறுகின்றனர்.