தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் யார்!முன்னாள் அமைச்சரின் பேத்தி விருப்ப மனு!

தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் யார்!முன்னாள் அமைச்சரின் பேத்தி விருப்ப மனு!

க.பாலகுரு,

 தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மண்ணை நாராயணசாமியின் பேத்தி  மீனாட்சி விருப்பமனு கொடுத்துள்ளார்.

  திருவாரூர் மாவட்ட மன்னார்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மண்ணை நாராயணசாமியின் பேத்தியான மீனாட்சி, மன்னார்குடி நகர மன்ற உறுப்பினராக உள்ளார். கட்சி ரீதியில்  திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது கணவர்  சூரிய பிரகாஷ் கட்டிட பொறியாளராக உள்ளார்.

  கல்வித்தகுதி, , MA , D.Arch   கட்டிட வடிவமைப்பாளர் ரோட்டரி சங்கத் தலைவர், அதன் வருங்கால உதவி ஆளுநர் பொருளாதார வசதி, சமூக சேவை உள்ளிட்ட தகுதிகளை கொண்டுள்ள மீனாட்சிக்கு தஞ்சை பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு ஆதரவும் இருக்கிறது" என்கிறது திமுக வட்டாரம்.

  மீனாட்சிக்கு சீட் கொடுக்கப்பட்டால், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார் குடி, திருவையாறு, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள முக்குலத்தோரின் ஓட்டுகளை சுலபமாக கைப்பற்றலாம்.

  இவருக்குப் போட்டியாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருக்கும் தலைமங்கலம் கோ. பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சீட் கேட்டுள்ளார்கள்.

  யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், தஞ்சை தொகுதியில், திமுக சார்பில் பெண் வேட்பாளர்கள் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை என்பதினால் மீனாட்சிக்கு சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.