கலைகளிலும் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்!மாவட்ட ஆட்சியர்!!

கலைகளிலும் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்!மாவட்ட ஆட்சியர்!!

G.K.Sekaran,

வேலூரில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா பள்ளி மாணவர்கள் விவசாயத்தை காப்போம்  ஊட்டசத்தான கிராமிய சிறுதானிய உணவுகள்  கிராமப்பன்பாடு குறித்தும் கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார்கள்

 வேலூர்மாவட்டம்,ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்  மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ,மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் P.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதுமிருந்து அரசு பள்ளிகளை சேர்ந்த  2567 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்  இதனை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தமிழ்மொசியின்  சிறப்பு ஆகியவைகள் குறித்தும் ஆடல் பாடல்களுடன் விளக்கும் வகையில் ஆடல்களை ஆடினார்கள் மேலும் மயிலாட்டம் ,ஒயிலாட்டம் , விவசாயத்தை காக்கும் வகையில் ஆடல்கள் சிறுதானிய தமிழ் பாரம்பரிய உணவுகளான சாமை தினை கேழ்வரகு ஆகியவைகளின் நன்மைகள் பிசா பர்கர் போன்றவைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வில்லுபாட்டு மூலம் விளக்கி போட்டிகளில் பங்கேற்றனர் மேலும் கும்மியாட்டம், டிரம்ஸ் இசைக்கருவி இசைத்தல் ,தப்பு இசை ஆகியவைகளும் இசைத்துகாட்டி மாணவர்கள் தனித்திறனை வெளிப்படுத்தினார்கள்

   இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் கலையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கலை போட்டிகள் நடக்கிறது மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி சிறந்துவிளங்கினாலும் இது போன்ற கலைகளிலும் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தமிழகம் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது அதை போல் கலைகளிலும் சிறந்து விளங்கவே இது போன்ற போட்டிகள் நடக்கிறது என பேசினார்

இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டுசட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. பி. நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.பாபு, துணை மேயர் திரு.சுனில் குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில ஆலோசகர் திரு. சுந்தரராமன்,வருவாய் கோட்டாட்சியர் திருமதி கவிதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி மணிமொழிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.வருவாய் கோட்டாட்சியர் திருமதி கவிதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி மணிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.