"தானம்" விழிப்புணர்வு நிகழ்வை துவக்கிய கலெக்டர்!

"தானம்" விழிப்புணர்வு நிகழ்வை துவக்கிய கலெக்டர்!

  ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் ஹோஸ்ட் லயன் சங்கம் மற்றும் சமூக பணி துறை தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தானம் பற்றிய விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தினர்.

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஹோஸ்ட் லயன் சங்கம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி  இணைந்து நடத்தும் தானம் பற்றிய விழிப்புணர்வு மரத்தான் போட்டியை  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

  இந்தப் போட்டியானது பொதுமக்களிடையே ரத்த தானம் கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

 

  இந்த மராத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

  இந்தப் போட்டியானது தூய நெஞ்ச கல்லூரி அருகில் இருந்து துவங்கப்பட்டு பாச்சல், அச்சமங்கலம், மாக்கனூர், வழியாகவும் தாமலேரிமுத்தூர் என 12 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முடிந்தது

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் லயன்ஸ் ரத்தினநடராசன் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரிய ஆண்டனிராஜ் லயன்ஸ் புவனேஸ்வரி மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.