மக்களவையில் கண்ணீர் புகை குண்டு வீச்சு! நால்வர் கைது ராகுல் காந்தி இருக்கையை குறி வைத்ததால் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ராகுல் காந்தி அமரும் இருக்கை உள்ள பகுதியை நோக்கி இன்று (புதன்கிழமை)கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ளது.
இதனால் எம்பிக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
கடந்த 2001 டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
லஸ்கர் இ துய்பாவை சேர்ந்த ஐவர் அதில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் பத்திரிகையாளர் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் இன்று பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர் கண்ணீர் புகை கொண்டு வீசிவிட்டு அங்கிருந்து குதித்து எம்பி இருக்கையில் தாவித்தாவி ஓடி தப்பிக்க முயன்றனர்.
அப்போது அவைக் காவலர்களும் சிவ சேனா கட்சியை சேர்ந்த எம்பி ஒருவரும் சேர்ந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது சாகர் என்பவர் தான் அந்த கண்ணீர் புகை குண்டை வீசி உள்ளார். அவருடன் ஒரு பெண்ணும் இருந்துள்ளார்.
இதில் சாகர் தன்னுடைய ஷூ சாக்ஸில் மறைத்து வைத்து அந்த கண்ணீர் புகை குண்டை அவைக்குள் கொண்டு வந்ததாக
தெரியவந்துள்ளது.
இந்த கண்ணீர் புகை குண்டு வீச்சினால் ஏற்பட்ட மஞ்சள் நிற புகை காரணமாக அவையில் இருந்த எம்பிக்களுக்கு கண்ணீர் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இரண்டு பெண் இரண்டு ஆண் என நான்கு பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நாட்டிலேயே மிகவும் உச்சகட்ட பாதுகாப்பு இருக்கும் நாடாளுமன்ற அவைக்குள் இப்படி கண்ணீர் புகை கொண்டு வீசி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
அதிலும் ராகுல் காந்தியின் இருக்கையை நோக்கி வீசப்பட்டிருப்பதால் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.
சகா எம்பிக்கள் ராகுல் காந்தி சூழ்ந்து நின்று கொண்டு அவரை வெளியேற்றி இருக்கிறார்கள்
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இது விஷப் புகை குண்டாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நீலம், அமுல் ,சாகர் உள்ளிட்ட நான்கு பேரை டெல்லி போலீஸ் சார் கைது செய்திருக்கிறார்கள்.
கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.