கிருஷ்ணகிரியில் வன்முறை! போலிசாரால் கவனிக்கப்பட்ட இளைஞர்கள்!

 த.முனிசாமி,

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சூளகிரி அருகே கோப்பசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் வன்முறை வெடித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 இன்று புதன் கிழமையன்று மேற்படி கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடத்துவதற்காக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருந்தார்கள்.

 ஆனால் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி இ.ஆ.ப.அவர்கள் அனுமதி ஏதும் அளிக்கவில்லை. அதே போல் அனுமதி மறுக்கவும் இல்லை.

  இந்நிலையில் இன்றுகாலை விவசாயிகள் தங்கள் எருதுகளை ஓட்டிக்கொண்டு வந்து களத்தில் கூடினர்.

 அதற்கு ஆட்சேபனை தெரிவித்த போலிசார் எருது விடும் நிகழ்ச்சிக்கு தடைவிதித்தார்கள்.

  ஆகவே ஆத்திரம் கொண்ட விவசாயிகளும் இளைஞர்களும் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே  கற்பாறைகளை போட்டு வாகனங்களை போகவிடாமல் தடுத்தனர்.

  இதனால் கடும் போக்குவரத்து தடை ஏற்பட்டு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு லாரிகளும், பேருந்து மற்றும் கார்களும் நின்றன.

 அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் எருதுவிடும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது.

 இருந்த போதும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

 பக்கத்து மாவட்டமான வேலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் "கள ஆய்வில் முதலமைச்சர்" நிகழ்வில் இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்நிலையில் நிலமையை சமாளிக்க முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் போலிசார் அவசர அவசரமாக சொந்த ஸ்டேஷன்களுக்கு திரும்ப வரவழைக்கப்பட்டனர்.

  கிருஷ்ணகிரியில் வன்முறை நடந்த இடத்துக்கு அதிரடிப்படையினர் விரைந்து சென்று கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர்.

  போலிசின் கவனிப்பை தாக்குபிடிக்க முடியாத கலவரக்காரர்கள் ஓட்டெமெடுத்தனர்.

 அவர்களை ஓடி ஓடி பிடித்து போலிசார் நையபுடைத்தனர்.

  தற்போது அங்கு நிலமைகட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.