ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை:- குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன்! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு!!

ஜி.கே.சேகரன்,
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தமில்லை ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடியும் எங்களுக்கும் சமமானவர்களே அவர்களின் தயவு திமுகவுக்கு தேவையில்லை - மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக அரசின் விதிகள் கடைபிடிக்கபடவில்லை அதனால் தான் நாங்கள் புறக்கணிக்கிறோம் ஸ்மார்ட் சிட்டியில் குளறுபடி இருப்பது உண்மை தான் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னைக்கு பேருந்து போக்குவரத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆணையர் அசோக்குமார், உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதில் நிறைய இடையூறு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கிறது.
கண்டலேறுவிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் போது கால்வாயின் வழியாக தண்ணீரை அங்குள்ளவர்கள் எடுத்துகொள்கின்றனர்.
அதிமுக அலுவலகம் சீல் வைப்பு என்பதில் பன்னீர் செல்வமும் எங்களுக்கு ஒன்று தான் பழனிசாமியும் ஒன்றுதான் எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும் ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை ஆளுநர் சனாதன தர்ம பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுபாட்டில் இருந்தது ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது ஆனாலும் பழைய வேகமில்லை கொரோனா பாதிக்கபடுபவர்கள் இரண்டு நாட்களில் சரியாகி விடுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களின் நானும் ஒருவன் அதற்கு மாநகராட்சி ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் தான் பதில் சொல்ல வேண்டும்.
மேல் அரசம்பட்டு அணை விரைவில் திறக்கபடும் பாலாறு தடுப்பணைகள் திருப்பாற்கடல்,அரும்பருதி,சேண்பாக்கம்,பொய்கை,மற்றும் அகரம் ஆறு கவசம்பட்டு ஆகிய இடங்களில் அணைகள் அமைக்கபடும் தற்போது தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது அதற்கு பிறகு பணிகள் துவங்கும் அரசு மணல் குவாரி துவங்க அனுமதி கேட்டுள்ளோம் எல்லா ஆறுகளிலும் தண்ணீர் இருக்கிறது என்று சொன்னார்.