பிசுபிசுத்த அ.தி.மு.க.முற்றுகை!

பிசுபிசுத்த அ.தி.மு.க.முற்றுகை!

 கு.அசோக்,

  போலீசாரின் அராஜகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   பால்வளத் துறை முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதி வேலை வாங்கி தருவதாக  மோசடி செய்தார் என புகார் எழுந்ததை தொடர்ந்து  15 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க முடியவில்லை.

  ஆனால் அவரிடம் அதிக நேரம் அலைபேசியில் பேசியதாக சிவகாசி தனிப் படையினரால் கடந்த 28 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணை செயளாலர் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் மற்றும் ஜோலையார்பேட்டை அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகிய இருவரும் சிவகாசி போலிசாரிடம் சிக்கினர்..

   இந்நிலையில் அவர்கள் கைது செய்யபடவில்லை. ஆகவே இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத காரணத்தால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

   ஆனால் இதுவரை போலீசாரிடமிருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை எனக் கூறியும் பிடித்துச் செல்லப்பட்ட  இருவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சுமார் 50 பேர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், டி.டி.சி.சங்கர்,மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 அப்போது வீரமணி எஸ்.பி.யை சந்தித்து புகார் பற்றின விவரங்களை கேட்டதோடு சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

   இந்நிலையில் அங்கு கூடியிருந்த சொற்ப அ.தி.மு.க.வினரையும் போலிசார் விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.

  இதனால், அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பு:- முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் வீரமணி தலைமையில் அங்கு திரளான அ.தி.மு.க.வினர் கூடுவார்கள் என நினைத்த திருப்பத்தூர் மாவட்ட போலிசார் ஏமாந்து போனார்கள்.

   அப்படி அங்கு வந்த சிலரும், விக்கியையும், ஏழுமலையையும் பிடித்துச்சென்ற அன்றே இந்த மாதிரி முற்றுகையை நடத்தி வெயிட் காட்டியிருக்க வேண்டும், இப்ப செய்து என்ன பிரயோஜனம் என்று சலித்துக் கொண்டனர்.

  படங்கள் நன்றி:- ஆர்.ரமேஷ்,