குழந்தைள் 7 மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள்! நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் 9.30 மணிக்கே வர முடியாதா?நீதிபதி கேள்வி!

குழந்தைள் 7 மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள்! நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் 9.30 மணிக்கே வர முடியாதா?நீதிபதி கேள்வி!

 ஜார்ஜ்.ரவி,

 நாட்டில் 'குழந்தைகளே காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு செல்கையில், நீதிபதிகளும், வக்கீல்களும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா?' என உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையாகும்.

  அப்படியிருக்க உச்ச நீதிமன்றத்தின் 2வது அமர்வின் நீதிபதியான யு.யு.லலித் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக 9.30 மணிக்கு வழக்கு விசாரணையை தொடங்கினார். அப்போது, வேறு ஒரு வழக்கில் ஆஜராக வந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 'இன்றைய தினம் வழக்கு விசாரணை 9.30 மணிக்கு துவங்கி விட்டது. அதனால், ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டது' என சொன்னார்.

  அதற்கு பதிலளித்த நீதிபதி யு.யு.லலித், 'குழந்தைகள் கூட காலை 7.30 மணிக்கே பள்ளிக்கு செல்லும் போது நீதிபதிகளாகிய நாங்களும், வழக்கறிஞராகிய நீங்களும் ஏன் காலை 9.30 மணிக்கு நீதிமன்ற பணிக்கு வரக்கூடாது? இது வரும் காலத்தில் தொடர் நடவடிக்கையாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது,' என சொன்னார்.

    குறிப்பு:-இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக இவருக்குத்தான் வாய்ப்பு வரப்போகுது என்கிறார்கள்.