டுயூட்டியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு 62ம் ஆண்டு தியாக தினம்!

டுயூட்டியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு 62ம் ஆண்டு தியாக தினம்!

ஜி.கே.சேகரன்,

 நாடெங்கிலும் டுயூட்டி நேரத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு அக்டோபர் 21 ஆம் நா¬ள் தியாக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1959 -  ஆம் ஆண்டு அக்டோபர் 21 - ஆம் தேதி எல்லைப் பகுதியான லடாக் உள்ள அருகே ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய படையைச் சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர்.

 இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 - ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

  அந்த வகையில் தமிழகத்தில் டிஜிபி சி.சைலேந்திரபாபு அவர்கள் நினைவேந்தலில் வீரவணக்கம் செய்தார். நடெங்கிலும் உயிர்நீத்த 377 காவலர்களின் தியாகத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

 அதேபோல் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 'காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

 மேலும், வேலூரில் நாடு முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 377 காவலர்கள் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வண்ணம் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் ஆயுதப்படை மைதானத்தில் நாடு முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த காவலர்கள் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நடந்தது.

 இதில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூணில் அக்டோபர் 21 ஆம் நாள் வீர வணக்க நாளாக அனுசரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்  தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  இதில் ஓய்வு பெற்ற காவலர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் துப்பாக்கியை தலைக்கீழாக பிடித்தும் துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.