சசிகலா மீது எப்.ஐ.ஆர்.போடுங்கள் சார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கெஞ்சல்!

ம.பா.கெஜராஜ்,
சசிகலா மீது எப்.ஐ.ஆர்.போடுங்கள் சார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலிசாரிடம் கெஞ்சினாராம்.
அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின் போது எம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றினார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை அவர் திறந்து வைத்தார்.
அந்த கல்வெட்டில் பொதுச் செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கல்வெட்டு குறித்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சசிகலா மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார்.
சசிகலா அதிமுக பொது செயலாளர் என்று கூறி கொள்வது பற்றி எடப்பாடி பழனிசாமி ஏகப்பட்ட கோபத்தில் வார்த்தைகளை வெளியிட்டார்.ஸ்
தமிழக ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொது செயலாளர் என சசிகலா கூறி கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன்.
சூரியனை பார்த்து... ஏதோ... அத நான் ஓபனா சொல்ல முடியாது. அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பொய்யான கல்வெட்டு வைத்த சசிகலா மீது அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
சசிகலா பொதுச் செயலாளர் என சொல்லி கொள்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் நாங்களே அதிமுக என்று உறுதிப்படுத்திவிட்டது.
பொழுது போகவில்லை என்பதற்காக சசிகலா ஏதோ செய்து கொண்டு இருக்கிறார்” அவரது பாணியில் கோபத்தை வெளிப்படுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டிலும், கடிதம் ஒன்றிலும் பயன்படுத்திய சசிகலா இவற்றையெல்லாம் பொழுது போகவில்லை என்பதற்காக செய்யவில்லை என்பது மட்டும் நிஜம்.