சிங்கத்தின் முகாமில் தில்லாக இறங்கிய நபர் கைது!

வித்யா,
ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்க முகாமுக்குள்ள் நுழைந்த நபர், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்
ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்குள் ஒருவர் நுழைந்தார். ஜி சாய் குமார் என்ற அந்த வாலிபருக்கு 31 வயது ஆகிறது.
அவர் சிங்கத்தின் முகாமின் பக்கவாட்டில் உள்ள ஒரு பாறாங்கல் மீது அமர்ந்திருந்து ஸ்சிங்கத்தை சீண்டிக்கொண்டிருந்தார்..
ஒரு கட்டத்தில், சிங்கம் பாறாங்கல் மீது பாய முயற்சித்தது.
இதையறிந்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து உயிரியல் பூங்கா அலுவலர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஐதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் சிங்கங்கள் விடுவிக்கப்படும் ஆப்பிரிக்க சிங்க அகழிப் பகுதியில் உள்ள பாறாங்கற்களின் மீது இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இது முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால், உயிரியல் பூங்கா ஊழியர்களால் மீட்கப்பட்டு, பகதூர்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.