நக்சல்களால் குறிவைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ராமோஜிராவ் மறைந்தார்.!

வி.டி.வித்யாசாகர்,
ஆந்திராவின் முகவரி என்று சொல்லப்படும் 'ஈ நாடு' பத்திரிகை நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜிராவ் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மறைந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த தளத்தில் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் ஆந்திராவில் பரவியிருந்த நக்சல்கள் குறித்த கட்டுரை ஈ நாடு பத்திரிகையில் பரபரப்பாக வெளியாகும். நாடுநிலையோடு வெளியான அப்படிப்பட்ட கட்டுரையினால் மனம் கோணிய நக்ல்சல்கள் பல முறை ராமோஜி ராவுக்கு குறிவைத்தனர்.
ஆகவே அவர் ராமோஜிராவ் ஃபில்ம் சிட்டியிலேயே தங்கியிருந்தார்.
ராமோஜிராவ் ஃபில் சிட்டியைப்பொருத்தவரை 1,666 ஏக்கர் பரப்பளவில் அது அமைந்துள்ளது. அதனுள் இல்லாத செட்டே கிடையாஷ்து, கிராமங்கள், நகரம், அயல்நாடு, விமானம், ஏரி, கடல் கப்பல், ரயில் என பல செட்டுகள் உள்ளன. இங்கு எடுக்கப்படாத திரைப்படங்கள் குறைவு எனலாம்.
இந்நிலையில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.