வீணாகும் பாலாற்று நீர்! ஊழியர்கள் உறக்கம்!

வீணாகும் பாலாற்று நீர்! ஊழியர்கள் உறக்கம்!

கு.அசோக்,

 பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்று தண்ணீர் வெளியேறும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறன.

   வேலூர் மாவட்டம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பாலாறு. இந்த பாலாற்றில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தன. தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் பாலாற்றில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மூலம் குடிநீர் ஆதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.

  இந்நிலையில் திருமணி அடுத்த மொனவூர் பகுதியில் உள்ள பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறில் இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.