24 மணிநேரம் இயங்கக்கூடிய அலுவலர்கள் தயார்!அமைச்சர் சக்கரபாணி பேட்டி!

க.பாலகுரு,
கனமழையை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலைஅயில் உள்ளது. 24 மணிநேரம் இயங்கக்கூடிய அலுவலர்களுடன் தயார் நிலையில் இருப்பதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூரில் பேட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது....
திருவாரூர் மாவட்டத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். பொதுமக்கள் புகார் அளிக்கும் வண்ணம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொடர்பு எண்கள் (1077) அறிவிக்கப்பட்டு புயல் மற்றும் கனமழை தொடர்பான பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
துணை ஆட்சியர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 10 ஒன்றியங்களிலும் கண்காணிப்பு பணிவுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லை, இருந்த பொழுதிலும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்க வைப்பதற்கு தேவையான நிவாரண முகமது தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கண் விழித்திரை மூலமாக பொருட்கள் தொடங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது விரைவாக தமிழக முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும்.பொங்கல் பரிசு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.தமிழக முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் அரிசி கோதுமை ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றார்.