பார்டனர்ஷிப்பில் லாட்டரி சூதாட்டம் நடத்தும் ஆற்காடு காக்கி!

ம.பா.கெஜராஜ்,
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கும் விநாயகபக்தர் ஒருவர் பார்டனர்ஷிப்பில் காட்டன் சூதாட்டம், மூனு நெம்பர் மற்றும் ஆன் லைன் லாட்டரி வியாபாரங்களை நடத்தி வருகிறாராம்.
குறிப்பாக இந்த காவல் நிலையத்தில் மகாராஜன் என்கிற ஒரு எஸ்.ஐ பணியிலிருந்த போதுதான் இவரும், அவரும், தே.மு.தி.க.நகர செயலாளர் பிரபு என்கிற காட்டன் வியாபாரியுடன் பார்னராக இணைந்து மேற்படி தொழில் தொடங்கினார்களாம்.
ஆற்காடு பஜார் அருகே பெரிய காம்ப்ளக்ஸை தலைமையிடமாக கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்த கூட்டணி கோடிக்கணக்காக பணத்தை ஈட்டி அசையா சொத்துக்கள் மற்றும் நகை, பணமாகவும் சேர்த்து வைத்துள்ளார்களாம்.
ஏற்கனவே இந்த கூட்டணியினர் மீதும், அதே போல் இராணிப்பேட்டை சப்டிவிஷனுக்குட்பட்ட சில எஸ்.ஐ.கள் மற்றும் எஸ்.எஸ். ஐ.கள் மீதும் உயர் போலிஸ் அதிகாரிகள் லெவலுக்கு புகார் சென்றதாம். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் 15 பேருக்கு பணியிடமாறுதல் அளித்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை ஏற்று 14 பேர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்டேஷனில் போய் ஜாயின் செய்து கடமையாற்றினார்கள். ஆனால் எஸ்.ஐ.மகாராஜன் மட்டும் ஆற்காடு நகர காவல் நிலையத்தை விட்டு போகவில்லை. அப்போதைய இராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபுவே இதற்கு காரணமாம்.
ஏனெனில், ஆற்காடு இன்ஸ்பெக்டருக்கு மகாராஜன் எஸ்.ஐ. எப்படி வலது கரமாக செயல்பட்டாரோ, அதே போல் மேற்படி டிஎஸ்பி பிரபுவுக்கும் இவர் வலது, இடதாக இருந்தார்.
அந்த விசுவாசத்தின் பேரில் தான் மகாராஜன், பணி மாறுதல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டார்.
அப்படியிருக்க, டிஎஸ்பி பிரபுவுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. அதன் பின்னர் எஸ்.ஐ.மகாராஜன் வாலாஜா காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அங்கு மாறுதல் ஆன அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி பிஸினஸை வாலாஜாவில் துவங்க வழிவகை செய்துள்ளாராம்.
ஆற்காடை பொறுத்தவரை இந்த கூட்டணி நடத்தும் காட்டன், தடை செய்யப்பட்ட மூன்று நெம்பர் லாட்டரி, ஆன் லைன் லாட்டரி பிசினஸை நம்பி பல கூலி தொழிலாளர்கள் அவர்களின் தினக்கூலியை இழந்து வருகிறார்கள். குறிப்பாக காட்டன் தொழில் ஏழை எளிய இஸ்லாமிய தொழிலாளிகளை குறிவைத்து நடத்தப்படுகிறது.
அதே போல் மூன்று நெம்பர் லாட்ட்டரி மற்றும் ஆன் லைன் லாட்டரி தொழில் பண ஆசை கொண்ட செல்வந்தர்களை குறிவைத்து நடத்தப்படுகிறது. இவர்களை நம்பி பணம் முதலீடு செய்த பலர் தலையில் துண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கள்ள பிசினஸை தடை செய்து நடவடிக்கை எடுக்கக்கூடிய இடத்திலுள்ள காவல் அதிகாரிகளே அதில் பார்ட்டனராக உள்ளதால், சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆகவே சென்னையை தலைமையிடமாக கொண்ட பழம் பெரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று சட்ட நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. முதல்கட்டமாக கள்ள வியாபாரியுடன் கூட்டு வைத்திருக்கும் காக்கிகளை குறித்து கட்டுகட்டாக ஆவணங்களை தயார் செய்திருக்கிறார்களாம்.
ஆனால் அந்த விநாயக பக்தராக இருக்கும் காக்கி ஆளுங்கட்சி எம் .எல் .ஏ.வின் நெருங்கிய உறவினராம்.
அது சரி,