வெளிநாட்டு மணமகனை உறவினராக ஏற்றுக் கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.!

 

ம.பா.கெஜராஜ்,

   இலண்டனைச் சேர்ந்த மணமகனை தனது உறவினராக பாவித்து பேசினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன்.

 இது பற்றின விவரம் வருமாறு,

   தென்னிந்திய திருச்சபை சினார்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஆர்த்தர் சதானந்தம். வேலூரைச் சேர்ந்த இவர், சி.எஸ்.ஐ வேலூர் பேராயத்தின் பேராயர் எச்.சர்மாநித்யானந்தம் அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

 இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் மூத்த பெண் திருமணம் முடிந்து அவர் அயல் நாட்டில் உள்ளார்.

 இந்நிலையில் அவரது இரண்டாவது பெண் கிரேஸ் இலண்டனைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டருடன் திருமணம் முடித்துள்ளார். அதனையொட்டி நேற்று (03.11.2022) மாலை காட்பாடி தொன்பாஸ்க்கோ அரங்கத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 அதனையொட்டி பேராயர் எச்.சர்மா நித்தியானந்தம் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். மத்திய ஆலயத்தின் தலைமை ஆயர் துவக்க பிரார்த்தனை நடத்திட, தொடர்ந்து எச். ஆர்த்தர் சதானந்தம் அனைவரையும் வரவேற்றார்.

 பின்னர் பேராய அலுவலகத்தின் பொருளாளர் திரு.சுந்தர்ராஜன், பேராய சாப்லின் ஆயர் சா.கிறிஸ்டோபர், மத்திய ஆலய செயலாளர் திரு.பால்ராஜ் ஆகியோர் வேத பாடங்கள் (பைபிள் வசனங்கள்) வாசித்தனர்.

 தொடர்ச்சியாக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் மணமக்களை வாழ்த்தி பேசினார், அதற்கு முன் அவர் மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கினார். அப்போது இடையே மைக்கை வாங்கி பேசிய பேராயர், இனி மேடைக்கு வருபவர்கள் அன்பளிப்பு தரவேண்டாம் என்று அன்பாக சொன்னார்.

 அதை கேட்டு சிரித்த ஞானசேகரன் இங்கு மணமகன் இலண்டனைச் சேர்ந்தவர், அவருக்கென உறவினர்கள் எவரும் இங்கு வரவில்லை. நான் அவரது உறவினரை போல எண்ணி என் சார்பில் மணமகனுக்கு அன்பளிப்பை வழங்கினேன்   அதனால் தான் சகோதரர் ஆர்த்தரின் அன்பு கட்டளையை நான் மீறினேன் என்றார்.

 இதையே மணமகன் அலெக்ஸிக்கு புரிகின்ற வகையில் ஆங்கிலத்தில் ஞானசேகரன் பேசும் போது மணமக்கள் ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

 அதை கவனித்த ஞானசேகரன் நீங்கள் இருவரும் பேச வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார்.

 ஆர்த்தர் அவர்கள் சமூக பணிகளிலும் சரி, அரசியல் பயணத்திலும் சரி என்னுடன் நீண்ட காலமாக பயணித்தவர். அப்போதெல்லாம் அவர் பணியாற்றிய மருத்துவமனையில் பலருக்கு உதவிகளை செய்வார், அவரை சுலபமாக பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது அவர் சினார்டில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதால் போன் செய்யும் போதெல்லாம் கொல்கொத்தாவில் உள்ளேன், மும்பையில் உள்ளேன் என்கிறார் அந்த அளவுக்கு அவர் பிஸியாகிவிட்டார்.

 அவரைத் தொடர்ந்து முன்னாள் பேராயர் ஒய்.வில்லியம் மற்றும் பேராய செயலாளரான ஆயர் ஜேரட் ஜெபரூபன் ஆகியோர் மணமக்களுக்கான வாழ்த்துரையும் நற்செய்தியும் வழங்கினர்.

 ஊரிசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெயகரன் ஐசக் அவர்கள் மேடைக்கு வர இயலாத நிலையில், இந்நிகழ்ச்சியின்  கதாநாயகர்களான மணமக்கள் கிரேஸிம், அலெக்ஸிம் கீழிறிங்கி வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

 மேலும் முக்கியஸ்தர்களுக்கு பேராயர் சார்பில் பொக்கே (பூங்கொத்து) கொடுத்து மகிழ்விக்கப்பட்டது.

 இந்த நிகழ்வின் முடிவில் முன்னாள் பேராயர் எ.ராஜவேலு அவர்கள் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார். பின்னர் அனைவருக்கும் இறைச்சி உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது.

 குறிப்பாக சொல்லவேண்டுமானால் அன்பளிப்பு தவிர்க்கப்பட்டிருந்தது.

 இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய ஆலயத்தின் சார்பில் ரவிராயல், சார்லஸ், ஜோசுவா, ஸ்டாலின், ஜான்சன், ஆரோன், பால், அன்பரசு, காட்பாடி தேவராஜ், ஜோபு, ரூபஸ், கெஜராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.