மாணவியை நீட் காவுகொடுத்துவிட்டது! திருமாவலவன் பேட்டி!

மாணவியை நீட் காவுகொடுத்துவிட்டது! திருமாவலவன் பேட்டி!

  ஜி.கே.சேகரன்,

  உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்கள் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை, நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது - நீட் தேர்வு விதிவிலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவரும் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து மாணவர்களின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் -காட்பாடியில் நீட்டால் இறந்த மாணவியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறிய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.

 வேலூர் மாவட்டம், காட்பாடியில் நீட்டால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

 பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்களை நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க்ஸ் எனபடுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது.

 காட்பாடி மாணவி சௌந்தர்யா அவ்வாறு செய்த போது தேர்வில் தோல்வி அடைவோம் என தெரிய வரவே அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 மாணவி தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனைக்குரியது.

  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

 தமிழக ஆளுநர் விரைந்து குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்.

 இந்திய ஒன்றிய அரசு, குடியரசு தலைவர் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் ஏற்கனவே அதிமுக ஆட்சியிலும் மசோதா கிடப்பில் போடப்பட்டது.

 நீட் தேர்வால் பாதிப்பு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு நகர்புற மாணவர்களுக்குமான இடைவெளி தமிழ் வழி மாணவர்கள் ஆங்கில வழிமாணவர்கள் என்ற முரண்பாடு, பயிற்சிக்கு செல்லும் மாணவர்கள் செல்லாத மாணவர்கள் இப்படிபட்ட இடைவெளிகளால் தான் பிரச்சணை ஏற்படுகிறது.

  அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போடமுடியவில்லை.

  சிறப்பு விதிவிலக்காக நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் சமூக நீதி மாநாடு நடத்தி முதல்வர் பங்கேற்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

  இதற்கெல்லாம் இடம் அளிக்காத வகையில் குடியரசு தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் நிதி அளிக்க வேண்டும்.

  மாநில அரசின் சட்டத்தை குடியரசு தலைவர் அங்கிகரிக்க வேண்டும்.

  எதிர்க்கட்சிகளான திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஒருமித்த கருத்துகளை சொல்ல வேண்டும்.

  திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் உள்ளாட்சிதேர்தலில் இடம் ஒதுக்க வேண்டும் இவைகளை அளவுகோலாக கொண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என கூறினார்.