ராஜினாமா செய்த ஒருமணிநேரத்தில் மீண்டும் முதல்வர்! ஆபரேஷன் தாமரையை பொய்க்க பண்ணிய நிதீஷ்-பிரசாந்த் கிஷோர் கூட்டணி!

ராஜினாமா செய்த ஒருமணிநேரத்தில் மீண்டும் முதல்வர்! ஆபரேஷன் தாமரையை பொய்க்க பண்ணிய நிதீஷ்-பிரசாந்த் கிஷோர் கூட்டணி!

ஜார்ஜ்.ரவி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஒரே மணி நேரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் அமோக ஆதரவோடு மீண்டும் பிகாரின் முதல்வர் ஆகியிருக்கிறார் நிதீஷ் குமார்.

லிது பற்றின விவரம் வருமாறு,

ஆபரேஷன் தாமரை என்கிற பெயரில், 'அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியதுதான் அதனுடனான உடனான உறவை முறித்து கொண்டதற்கான காரணம்' என்று நிதீஷ் பகிரங்கமாக கூறியுள்ளதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

  ஒரு மாநிலத்தில் ஆட்சி, அதிகாரத்துக்கு வர பாஜக கையாளும் பல்வேறு உத்திக்கு ஆபரேஷன் தாமரை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

 அந்த மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைந்து, அதன் நிழலிலே மெல்ல மெல்ல வளர்ந்து நாளடைவில் அக்கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களை கொண்டு அக்கட்சியை உடைத்து மாநிலத்தில் கோலோச்சுவது இது தான் அதன் முக்கிய பணி.

 ஆபரேஷன் தாமரை எனப்படும் பாஜகவின் இந்த திட்டத்துக்கு சமீபத்தில் பலியானவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அக்கட்சிக்குள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி உத்தவ் தாக்கரேவை முதல்வர் நாற்காலியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஷிண்டேவை அமரவைத்து அழகு பார்த்துள்ளது பாஜக.  

 இரண்டாண்டுக்கு முன் பாஜகவுக்கு சிவசேனா செய்த துரோகத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

  ஆனால், பாஜகவுடன் நீண்ட காலமாக சுமூக உறவில் இருந்துவரும் ஐக்கிய ஜனதா தளத்தையே சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டதாக நிதீஷ் குமார் கூறுவது திகைக்கக்கூடியது.

 தங்களோடு அரசியல் நட்பு பாராட்டுபவர்களை முதுகில் குத்தும் செயல் என்று பாஜகவை சாடுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 எது எப்படியோ ஆபரேஷன் தாரையை வெற்றிகரமான முறியடுத்து தமது முதல்வர் பதவியை தக்கவைத்து கொண்டுள்ளதுடன், ஐக்கிய ஜனதா தளத்தையும் பிளவு ஏற்படாமல் காப்பாற்றி உள்ளார் நிதீஷ் குமார்.

 மேலும் தன்னிடமே வேலை காட்ட துணிந்த பாஜகவுக்கு இன்று தக்க பாடம் புகட்டி உள்ள நிதீஷ் குமார், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

 அதற்கேற்றவாறு, தேசத்தில் காங்கிரசும் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதால் இந்த முடிவை  நிதீஷ் ஏற்றுக்கொள்வதை தவிர அதற்கு வேறு வழியில்லையாம்.

 இவ்வளவுக்கும்  பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனையே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.