தொழிலாளர்களை டென்ஷனாக்கிய பிஎப் அலுவலகம்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூரில் மூடப்பட்ட தோல் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 800 பேருக்கு அந்த நிறுவனம் 10 கோடி செலுத்தியும் வருங்கால வைப்பு நிதியை அலுவலகம் அதை கொடுக்காததால் சத்துவாச்சாரியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உள்ளது இந்த அலுவலகத்தை ஆம்பூர் பகுதியை சேர்ந்த ப்ளோரண்ட் ஷு நிறுவனம் மற்றும் ப்ளோரண்ட் அப்பர் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் முற்றுகையிட்டனர்.
மேற்படி நிறுவனத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் இந்த நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் சொத்த விற்று அவர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியை வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அந்த நிறுவனம் விற்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி 10 கோடியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தினார்கள்.
அவ்வாறு வழங்கபட்ட 10 கோடியை 800 தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் காலம் தாழ்த்தியதால் முற்றுகையில் ஈடுபட்டு காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மூன்றுவார காலத்தில் பணத்தை தொழிலாளர்கள் வங்கி கணக்கின் மூலம் தருவதாக தெரிவித்ததை அடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர் இதனால் பரபரப்பு காணப்பட்டது.