சிபிசிஐடியின் எப். ஐ. ஆரில் எடப்பாடி பெயரா?

ம.பா.கெஜராஜ்,
சிபிசிஐடி யின் விசாரணை வளையத்திலுள்ள கொடநாடு வழக்கில் புதிய எப் .ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டு அதில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு இஷ்டமான கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. தொடர்பான வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இதற்கான விசாரணை 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் தீவிரமடைந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ள நிலையில் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் சூழல் நிலவுகிறது.
அப்போது ஏற்கனவே நடந்த விசாரணைகளின் சங்கதிகளும், புதிதாக நடத்தப்படும் விசாரணை விவரங்களும் இடம்பெறும். அப்போது விடுபட்ட குற்றவாளிகளின்ரெவரும் இருந்தால் அது சேர்க்கப்படும்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் சயான் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் புதிய குற்றவாளிகளின் பட்டியலில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது நெருங்கிய ஆதரவாளரான சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத திருப்பங்கள் கூட வரலாம் என்று கூறப்படுகிறது. இதுதவிர சாட்சியங்களிடம் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்கும் நடவடிக்கைகள் சிபிசிஐடி போலீசாரால் மேற்கொள்ளப்படும். எனவே சிபிசிஐடி மூலம் பதியப்படும் எஃப்.ஐ.ஆர் பதற்றத்தை ஏற்படுத்தும், குறிப்பாக அதிமுகவை அசைத்துப் பார்க்கும் என்று கூறப்படுகிறது.