எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு பதற்றம்!

எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு பதற்றம்!

  ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜெடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலையை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உடைத்து உள்ளனர்.

  இதனை அறிந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,ஒன்றிய செயலாளர் செல்வம்  உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்ததனர்.

   அப்போது குரிசிலாப்பட்டு போலீசாரிடம் அதிமுகவினர் புரட்சி தலைவர் அவர்களின் சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது போலீசார் உடனடியாக மர்ம நபர்களை கைது செய்து விடுகிறோம் என உறுதி அளித்ததின் பேரில் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

   மேலும் புரட்சி தலைவர் அவர்களின் திருவுருவ சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யப்படவில்லை எனில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெறும் என போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 இதற்காவது அ.தி.மு.க.வினர் போராடுவார்களா?