அழகு நிலையப் பெண் கொலை!சூட் கேஸில் உடல் அடைப்பு!பாலியல் தொழில் போட்டி காரணமா? போலிஸ் விசாரணை!!

கதிர்,
சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஜ் மண்டல் என்ற 27 வயது பெண் வசித்து வந்தார்.
அவருடன் பிரதாப்னென்பவரும் இருந்து வந்தார்.
இதில் பிரதாப், சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்படியிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் சில நாட்களாக சென்னையில் தான் இருப்பதாகவும், தேஜ் மண்டல் தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து உரிமையாளர் நடேசன் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது . அத்துடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நடேசன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தேஜ் மண்டல் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது.
அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அதை திறந்து பார்த்த போலிசார் அதிர்ந்தனர்.
அதில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இருந்துள்ளது. சூட்கேசில் சடலமாகக் கிடப்பது தேஜ் மண்டல் என்பதை வீட்டு உரிமையாளர் உறுதி செய்துள்ளார்.
அவர் இறந்து சுமார் ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்கிற நிலையில் உடற்கூறு சோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேஜ் மண்டல் பாலியல் தொழிலில் கைதான சில நபர்களுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும், அந்த வகையில் இவர் சேலம் மாநகரில் அழகு நிலையம் என்ற பெயரில் ஃபேர்லேண்ட்ஸ் , சங்கர்நகர் உள்ளிட்ட பல இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.