வாகன திருடன்களை பிடிக்க திணறும் போலிஸ்!

இம்மி,
இருசக்கர வாகனம் கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தியும் திருடனை பிடிக்க முடியாமல் திணறல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் இருசக்கர வாகனம் இரவு நேரங்களில் கொள்ளை போவது தொடர்கதையாகியுள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு தக்காளி வியாபாரங்களை முடித்து விட்டு வாணியம்பாடி பெரிய பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் அருகாமையில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த காட்சி அருகிலிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து இஸ்மாயில் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளை எடுத்துசென்று புகார் கொடுத்ததை அடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இரு சக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வாணியம்பாடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
எப்படியும் பிடிச்சிடுவாங்க!