கூவம் ஆற்று மணலையும் திருடுகிறார்களே? கமல் வேதனை!

க.முகில்,
கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓரா
ண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது குறித்து மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
இந்த மணல் கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல. இந்த மணலை கொண்டு கட்டிடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என் கட்டுமான நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அப்படியெனில் இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றை பயன்படுத்தப்போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருடுகிறார்களே என வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடருகிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்பட போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா என கமல் அந்த அறிக்கையில் சற்று பொங்கியுள்ளார்.