சின்னம்மா? யாரும்மா அந்த குரங்கு! சசிகலாவின் கதையும் உட்கருத்தும்!

சின்னம்மா? யாரும்மா அந்த குரங்கு! சசிகலாவின் கதையும் உட்கருத்தும்!

 ம.பா.கெஜராஜ்,

 திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா, குரங்கும் - மாங்கொட்டையும் என்கிற கருத்தான கதையை சொன்னார்.

  சசிகலாவின் உதவியாளர்களில் ஒருவரான ஆதவன் என்பவரின் திருமண நிகழ்ச்சி  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்றது.

  அதில் கலந்துகொண்ட சசிகலா கடை ஒன்றை சொன்னார்.

   அதில் ``குரங்கு ஒன்று மாம்பழம் ஒன்றை சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் நமக்கு நிறைய பழங்கள் கிடைக்கும் நம் இஷ்டத்துக்கு மாம்பழங்களை சாப்பிடலாம் என, மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீர் ஊற்றியது. சிறிது காலம் ஆகியும் அந்த இடத்தில் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவரசம், அந்த அவசர புத்திக்கொண்ட குரங்கு, மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்யை எடுத்து பார்ப்பதும், மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது.

   மாங்கொட்டை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சும் விட்டது. ஆனால் மாங்கொட்டை செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை எடுத்து தூர எரிந்து விட்டு வருத்தப்பட்டது. அந்த குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசரபுத்தி நியாயமானதல்ல. காலம் என்ற நியதி இல்லாமல், எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை.

  எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும்.

   சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சில விஷயங்களை நாம் மறந்து விட வேண்டும். அப்படி செயல்பட்டால் நம் இயக்கம் வலிமை பெறும்" என்று பேசினார் சசிகலா.

அப்போது அங்கிருந்த ஒரு தொண்டர் சின்னம்மா யாரும்மா அந்த குரங்கு என்று கேட்க, அதற்கு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.