அய்யா-சாமி டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்!கலெக்டர் ஆபிசில் தர்ணா!

அய்யா-சாமி டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்!கலெக்டர் ஆபிசில் தர்ணா!

 ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே வடகரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் தமிழக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அரசு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.

  இந்தநிலையில் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வாசுகி சிவகுமார் தலைமையில் மனு கொடுக்க புகைப்படத்துடன் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

   நுழைவாயிலில் நின்றிருந்த காவல் துறையினர் ஐந்து பேர் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்க வேண்டும் என கூறியதன் அடிப்படையில் மீதமுள்ள நபர்கள் செல்லாத முடியாத நிலை ஏற்பட்டது.

  அதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் அங்கு இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்களை கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.