நடிகையின் தற்கொலை முயற்சிக்கு ஹரி நாடாரே காரணம்! சிறையிலேயே கைது! அடுத்து சீமானா? 

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு  ஹரி நாடாரே காரணம்! சிறையிலேயே கைது! அடுத்து சீமானா? 

    ஜெ.அபி,

   நடமாடும் தங்கக்கடை என பேசப்படுபவர் ஹரிநாடார். இவர் பனங்காட்டுப்படை கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் அவர் ரூ.16 கோடி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ளார்.

    அப்படியிருக்க  நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.

     நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சீமான் மற்றும் ஹரி நாடார் ஆகியோர் தன்னை மிரட்டுவதாக கூறி கடந்த சில வருடங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றார்.  

  இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு வந்தார். விஜயலட்சுமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சீமான், ஹரி நாடார் தூண்டுதலின் பேரில் சதா நாடார் என்பவர் மிரட்டியதாக நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சதா நாடார் என்பவர் மீது திருவான்மியூர் போலீசார் கொலை மிரட்டல், பெண்ணை களங்கப்படுத்தும் விதமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து சீமான், ஹரி நாடார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

 ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற திருவான்மியூர் போலீசார் அவரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். ஆகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்.

  இதே வழக்கில் சம்மந்தப்பட்டதாக சீமான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது