கஞ்சா, உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த மூன்று போலிசார் சஸ்பெண்டு!

ஜி.கே.சேகரன்,
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் தொடர்பிலிருந்த 3 காவலர்கள் அதிரடி (பணிநீக்கம்) சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் அதிரடி உத்தரவு.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலான சில காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மறைமுகமாக கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோருடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் செல்போன் என்னில் வரும் அழைப்புகளை ஆய்வு செய்ததில், போதை கஞ்சா பொருள் விற்பனையில் ஈடுபடுவேரிடம் மறைமுகமாக காவல்துறை அதிகாரிகள் செல்போனில் பேசியது வந்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து இந்த கஞ்சா விற்பனையில் ரகசிய தொடர்பு இருந்த சோளிங்கர் காவல் நிலைய தலைமை காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ், அரக்கோணம் டவுன் காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகிய மூன்று காவலர்களை எஸ்.பி தீபா சத்யன்,இ.கா.ப. அவர்கள் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
எஸ்.பி.தீபாசத்யனின் இந்த அதிரடி உத்தரவால் காவலர்கள் மத்தியில் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவாகிறது.
இது மாதிரி வேலூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் குடியாத்தம் சப்டிவிஷன் மற்றும் வேலூர் சப்டிவிஷன் ஆகியவற்றில் பலர் சிக்குவார்கள்?!!