ஷாருக்கான் வீட்டுக்குள் நுழைந்த என்.சி.பி.! சிறை சந்திப்புக்கு பின் பரபரப்பு! உளவுத்துறை கைங்கிரியம்!

 ஷாருக்கான் வீட்டுக்குள் நுழைந்த என்.சி.பி.! சிறை சந்திப்புக்கு பின் பரபரப்பு! உளவுத்துறை கைங்கிரியம்!

ம.பா.கெஜராஜ்,  

 பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மும்பை ஆர்தர் சாலையிலுள்ள சிறையில் அவரது மகன் ஆர்யன் கானை சந்தித்த சில மணிநேரங்களில் என்.சி.பி. அவர் வீட்டுக்குள் நுழைந்தனர்.

  மும்பை மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கான் வீட்டிற்கு எதற்கா அவர்கள் சென்றனர் என வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

 ஆனால் கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை சரிபார்க்க வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த குழு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் வீட்டை விட்டு வெளியேறியது.

  அக்டோபர் 21 வியாழக்கிழமை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அவரது மகன் ஆர்யன் கானை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். 

  இருவருக்குமிடையே கண்ணாடி தடுப்பு இருந்ததால் அவர்கள் இண்டர்காம் போனில் பேசிக் கொண்டார்கள். அப்போது நான்கு காவலர்கள் உடன் இருந்தனர்.

  இந்த சந்திப்புக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மீடியாக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

  ஆனால் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்கு அவசர விசாரணை கோரி கான் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே நீதிபதி என்.டபிள்யூ சாம்ப்ரே முன் மனு தாக்கல்  செய்தார்.

                                   டிடிஜி அஷோக் முத்தா ஜெயின், (என்.சி.பி)

நடிகர் ஷாருக்கான் சிறைக்கு வந்தபோது ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அங்கு கூடினர்.

 சிறை வளாகத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுவரை, கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சிறைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

  வியாழக்கிழமை காலை முதல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கத் தொடங்கினர். அந்த வகையில் தான் ஷாருக்கான் சிறையில் உள்ள அவரது மகனைக் காண முடிந்தது.

 குறிப்பு:- போதைபொருள் தடுப்புப்பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில் எங்கள் அதிகாரிகள் ஆர்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை எடுப்பதற்காக ஷாருக்கானின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

 வழக்கு தொடர்பாக ஆர்யன் கான் தொடர்புடைய சிலவற்றை ஆராய  நாங்கள் அங்கு சென்றிருந்தோம்’’ என என்.சி.பி. டிடிஜி அஷோக் முத்தா ஜெயின் தெரிவித்துள்ளார்.

 ஆக, ஆர்யன் கான், அவரது தந்தையிடம் பேசும் போது தெரிவித்த சில விஷயங்களை ஒட்டுக் கேட்ட உளவு பிரிவினரே இந்த ரைடுக்கு முக்கிய காரணம்.