ஜெயலலிதாவின் நகைகளை உள்துறை முதன்மை செயலாளார் பெற்றுக் கொள்ள உத்தரவு!

உ.சசிகுமார்,
ஜெயலலிதாவின் நகைகளை, மார்ச் 6, 7 தேதிகளில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், பெங்களூரு நீதிமன்றத்தில் உள்ளன.
அவை 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது. அப்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் பொருட்களை ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்திருக்கிறது.