தாழ்த்தப்பட்டோர் ஆணைய உத்தரவை மதிக்காத அலுவலர்கள்!

தாழ்த்தப்பட்டோர் ஆணைய உத்தரவை மதிக்காத அலுவலர்கள்!

  ம.பா.கெஜராஜ்,

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தன். இவரது பஞ்சமி நிலம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை சேர்ந்த  கார்த்திகேய முதலியார் என்பவரின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

   குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 6127/2009 இந்த எண் கொண்ட ஆவணமாக இவை பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

  அதே போல் வேலூர் டவுன் தோல் கிடங்கு தெரு சந்திரசேகரன் மனைவி பத்மினி என்பவர் பெயரில் எந்த ஒரு ஆவணம் இல்லாமல் (பட்டா, சிட்டா, அடங்கல்.) எதுவுமின்றி 3019/2017. இந்த எண் கொண்ட ஆவணம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதற்கு சார் பதிவாளர் லோகநாதன் என்பவரும், இணைப்பதிவாளர் ஜெய்சங்கர் என்பவரும் உடந்தையாம்.

   இதுகுறித்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பஞ்சமி நிலம் குறித்து 19/3/2021 அன்று புகார் செய்யப்பட்டது.    அதன் பெயரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது.

   வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், குடியாத்தம் வட்டாட்சியருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும் விசாரணைக் கடிதம் அனுப்பப்பட்டது.

   ஆனால் அவற்றின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரிடம் 5/8/2021 அன்று தாழ்த்தப்பட்ட ஆணையம் பிறப்பித்த உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நினைவூட்டல் கடிதம் கொடுக்கப்பட்டது.

  அதன் பின்னரும் கோட்டாட்சியர் எந்த நடவடிக் எடுக்கவில்லை.

  இந்நிலையில், 19/3/2021, 21/6/2021, 23/8/2021 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூன்று முறை விசாரணை கடிதம் அனுப்பியது.

   ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பதிவாளர் லோகநாதன், இணைப் பதிவாளர் ஜெய்சங்கர், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பஞ்சமி நிலத்தை மீட்டுத் தரும்படி அவர்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என்று புகார்தாரரான சதானந்தன் மீண்டும் ஆணையத்தை நாடியிருக்கிறார்.